தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இருந்தால் தான் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள் வாங்க முடியும்.  இதன் மூலமாக அரசின் நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தனர் . இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.