ஆந்திர மாநிலத்தின் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஒரு கொடூரமான சிறுத்தை புகுந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. திருமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அருகே பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த சிறுத்தை அவர்கள் முன்னால் வந்து நின்றது. சிறுத்தையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு சில நொடிகள் பெரும் நெரிசலும் கூச்சலும் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் வைரலாகி வருகிறது.
Leopard Sighting on Tirumala Alipiri footstep Triggers Panic
A leopard sighting on the Tirumala Alipiri footpath caused panic among devotees on Friday.
According to reports, the animal was spotted near the Lakshmi Narasimha Swamy Temple, leaving devotees frightened. A group of… pic.twitter.com/fdGfVfvMGK
— Karnataka Portfolio (@karnatakaportf) July 11, 2026
சம்பவம் நடந்த உடனே சுதாரித்துக் கொண்ட வனத்துறையினர், உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து சத்தமிட்டும் கூச்சலிட்டும் சிறுத்தையை மிரட்டினர். வனத்துறையினரின் இந்த துரித நடவடிக்கையால் சிறுத்தை பயந்து மீண்டும் அடர்ந்த காட்டுக்குள்ளேயே ஓடி மறைந்தது; இதனால் ஒரு பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சேஷாசலம் வனப்பகுதி வழியாகச் செல்லும் இந்த 11 கிலோமீட்டர் நீளமுள்ள பாரம்பரிய அலிபிரி நடைபாதையில், இதற்கு முன்பும் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்ததால் தற்போது திருப்பதி தேவஸ்தானமும் வனத்துறையும் பாதுகாப்பை பலமடங்கு அதிகரித்துள்ளனர். இரவு நேரங்களில் பக்தர்கள் தனியாகச் செல்லாமல் குழுவாகச் செல்ல வேண்டும் என்றும், வனவிலங்குகளைக் கண்டால் அவற்றுக்குத் தொந்தரவு தராமல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
