மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவுக்கு பதிலளிக்குமாறு இபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறி வருகிறார். தேர்தல் நெருங்கும் சூழலில், இவ்வழக்கு இபிஎஸ் தரப்பினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.