தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அட்சம்பேட்டா மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் இயற்கையான பிரசவத்திற்காக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நகர்கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா பிரசவ வலி காரணமாக கடந்த 25ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது சாதாரண பிரசவம் பார்ப்பதற்காக அரைக்குள் சென்ற மருத்துவர்கள், ஊழியர்கள், கர்ப்பிணியின் கைகளைப் பிடித்து வயிற்றில் அடித்து பிரசவம் பார்த்தனர். மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஹைதராபாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.