கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியிட்டு விழாவில் தமிழக முதலமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர், மற்றும் நடிகர் கமலஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரை மேடையில் ஏற்றுகின்றனர்.

மேலும் இது போன்று பாலியல் குற்றம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டால் ஆதரவு குரல் எழுப்புபவர்களும் முடங்கி போவார்கள். நான் நினைப்பது நடக்கும் வரை பிராத்தனை செய்வதை தவிர என வேறு வழி இல்லை என பதிவிட்டுள்ளார்.