தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இதுவரை 170 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயின் தி கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று யுவன் சங்கர் ராஜாவின் instagram பக்கம் திடீரென முடங்கிய நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.

இதனால் ரசிகர்கள் பலரும் அவரிடம் மன்னிப்பு கேட்டு பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதன் காரணமாக நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு விளக்கம் அளித்தார். அதில் அவர் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகவில்லை எனவும் சில டெக்னிக்கல் பிரச்சினைகளால் அப்படி காண்பிக்கிறது என்றும் கூறியிருந்தார். அந்த பிரச்சனைகளை என்னுடைய குழு சரி செய்த பிறகு விரைவில் instagram-க்கு வருவேன் என்று பதிவிட்டிருந்தார். மேலும் இதன்மூலம் யுவன் சங்கர் ராஜா திடீரென பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.