தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா- ஜோதிகா. இவர்கள் தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் மற்றும் மாயாவி போன்ற பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணமான நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ‌ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்  நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் கடைசியாக காதல் தி கோர் என்ற திரைப்படமும் சைத்தான் திரைப்படம் வெளியானது.‌ இந்நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா சமீம் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ‌ இல்லையெனில் பெங்களூரு டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.