தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ‘இன்றைக்குள் 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், அறிவித்தபடி நாளை முதல் போராட்டம் நடைபெறும்’ என சிஐடியூ சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

எந்த லாபம் வரும் என்றாலும், தொழிலாளர்கள் நலனே முக்கியம். வேலை நேரத்தை குறைக்க வேண்டிய காலம், குறைக்க வேண்டிய தருணம் இது என்று கூறிய அவர், 8 மணி நேரம் வேலை என்ற விதியையே சட்டத்தில் இருந்து நீக்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.