தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் நான்காம் தேதி வரை பெய்ய உள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தான் மழை நீர் வேகமாக வடிந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், மழை நீர் வடிகால் பணிகள் நல்ல பலனை அளித்துள்ளது என்று கூறினார். மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.