தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மற்றும் பண்டகமில்லா அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த குளறுபடியில் டோக்கன் பெற முடியாதவர்கள் ஜனவரி 13ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது