தீபாவளி பண்டிகையையொட்டி, முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வழக்கமாக 15ம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு 10ம் தேதியான இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் பணிகள் காலை முதலே தொடங்கி நடந்து வந்தது.

இந்நிலையில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 (1,13,84,300) ஆக உயர்ந்துள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். உரிமைத் தொகை 2ம் கட்ட விழாவில், புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் இந்த மாதம் முதல் 1000 பெறப்போவதாகவும், தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படுவதாகவும் கூறினார். நவம்பர் மாத உரிமைத் தொகை இன்று மாலைக்குள் அனைவருக்கும் வரவு வைக்கப்படும் எனவும் கூறினார்.