இராணுவத்தில் உள்ள மகளிர் வீராங்கனைகள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீராங்கனைகளுக்கு அவர்களது உயர் அதிகாரிகளுக்கு இணையாக மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான விதிகளை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிதலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது முப்படைகளில் உள்ள மகளிர் அலுவலர்கள், இயல்பிற்கு மாறான சந்தர்ப்பங்களில் ஊதியம் இன்றி ஒரு மாத விடுப்பு நீட்டிப்புடன் கூடிய 180 நாட்கள் மகப்பேறு விடுப்பினைப் பெறத் இனி தகுதியுடையவர்கள் ஆவர். கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு போன்ற சூழ்நிலைகளில் 30 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்.