தலைசிறந்த இலக்கியவாதிகளுக்காக ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் இருந்து இன்று மதியம் மூன்று மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 24 இந்திய மொழிகளில் உள்ள இலக்கியவாதிகளுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.