தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி பனிமலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தென் மாவட்ட ரயில்கள் ஜூலை 30-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை மாற்று பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரயில்வே பாதை வழியாக செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ரயில் பயணத்தைச் செல்ல திட்டமிட்டுள்ளோர் மூன்று தினங்களும் ரயில்களின் வழித்தடத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.