இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக காதலர் தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரை, கோயில், பூங்கா உள்பட பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில அமைப்புகள், காதலர்களை கொச்சைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களிடம் சென்று கையில் தாலி கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தி தொந்தரவு செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். எனவே கடற்கரை பகுதிகளில் காதலர்களை தொந்தரவு செய்யும் வகையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.