வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது நிகழ்கிறது. பூமியின் நிழல் சந்திரன் மேற்பரப்பில் விழும் போது பெனும்பிரல் என்னும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி(இன்று) நடைபெற உள்ளது. முதல் சூரிய கிரகணம் மே 20ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி(இன்று ) இரவு 8.45 மணி முதல் அடுத்தநாள் காலை 1 மணி வரை நிகழவுள்ளது. இந்த கிரகணம் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா அகிய பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.