தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மாதம்தோறும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பலருக்கும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது. இதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் முதலில் உங்களது வங்கி கணக்கில் உள்ள இரும்பு நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டை பயன்படுத்தி money statement மூலமாகவும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றால் இ சேவை மையம் மூலமாக அதற்கான உரிய தகவல்களை நீங்கள் பெறலாம். இல்லையென்றால் 1100 என்ற எண்ணை அழைத்து உரிமை தொகை தொடர்பாக புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.