தமிழகத்தில் குடும்ப தருவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்து செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று முதல் மகளிர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்க அரசு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மேல்முறையீடு செய்தவர்கள் பலதது விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலனையில் இருப்பதாகவும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்றும் முதல்வர் கூறியுள்ளார். அதிகாரிகள் கள ஆய்வு செய்த டிசம்பர் மாதம் முதல் புதிய நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.