2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆரியன் ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில பகுதியை தவிர்த்து விட்டு ஆளுநர் உரையை வாசித்தார். அது மட்டுமல்லாமல் சில தகவல்களையும் இணைத்து ஆளுநர் பேசினார். பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று பயன்படுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எஸ் டி பி ஐ “ஆளுநர் பதவியில் இருந்தும் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இன்று பெரும் பரபரப்பான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.