இந்தியாவில் சுங்கச்சாவடிகள் தொடர்பான விஷயங்களை நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் பேடிஎம் மூலமாக தேசிய மின்னணு டோல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது எந்த ஒரு புதிய டோல் பிளாசாக்களையும் எடுப்பதற்கு பேடிஎம் வங்கிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் சார்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் சேவை நிலை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவுருகளுக்கு இணங்காத காரணத்தினால் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.