உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே பார் நடத்துவதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு பதிலாக ஹோம்ஸ்டே போன்றவை அதிகரித்து வருகிறது. அதனால் ஹோம் ஸ்டே நடத்துபவர்கள் வீடுகளிலேயே பார் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. பாத்ரூம்ல இருக்குது அதன்படி ஹோம் ஸ்டடேகளில் நடத்தும் பார்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் 60 லிட்டர் வரை வைத்துக் கொள்ளலாம். மேலும் பீர் 9 லிட்டர் வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது.