இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயிலில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறார்கள். இந்நிலையில் ஐஆர்டிசி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தற்போது புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பாக பயணிகள் ஐஆர்டிசி கணக்கை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி போன்றவற்றை அதில் சரி பார்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில் கொரோனா காலகட்டத்தின் போது பலர் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இருந்ததன் காரணமாக தற்போது ஐஆர்டிசி கணக்கை சரிபார்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கணக்கை சரிபார்த்தால் மட்டும்தான் உங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.