பொதுவாகவே மக்களின் பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவையானது உதவிகரமாக உள்ளது. நாள்தோறும்  ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணிகளும் முழுமையாக சீல் வைக்கப்பட்ட இரண்டு மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும், மெட்ரோ வளாகத்தில் மது அருந்துவது இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ வளாகத்தில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பயணி ஒருவர் போதையில் அநாகரீகமாக நடந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.