கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் மூலமாக இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு கேரளா லாட்டரி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கேரளா அரசு ஒப்புக்கொண்டதால் தினமும் ஒரு கோடீஸ்வரர் கேரளாவில் உருவாக்கி விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.