குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இனி வரும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் தேதியே பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.