இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாகும். பெரும்பாலும் மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். தற்போதுள்ள செயலிகளை தவிர்த்துவிட்டு, இந்திய ரயில்வே விரைவில் புதிய சூப்பர் செயலியை பயணிகளுக்காக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்திய ரயில்வே சுமார் ரூ.90 கோடி செலவழிப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. இரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பயணிகள் பெறும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.