கொலராடோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் அங்கூர் குப்தா என்ற நபர் ஒரு நிமிடத்தில் 0 – 100 சதவீதம் வரை போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலமாக மடிக்கணினிகள் மற்றும் மொபைல் ஃபோன்களை ஒரு நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

அது மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் காரை 10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக பவர் கிரிட்களில் மின்சாரத்தை வேகமாக சேமிப்பதற்கும் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.