நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணை பணம் வழங்கப்பட்டுள்ளது. 17ஆவது தவணைக்கான தொகையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே மத்திய அரசு உதவி தொகை திட்டத்தில் பயனடைய முடியும் என்றும் சொந்த நிலம் இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைய முடியாது. மேலும் இதுவரை இவர்கள் பெற்ற தொகையானது மீண்டும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.