மக்களவை தேர்தல் தேதியை கடந்த 16 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

அதில் ஏழைப் பெண்களுக்காக மஹாலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.8,000 கிடைக்கும். இத்திட்டம் மக்களின் மத்தியில் வரவேற்பை பெறும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது