இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளை திறந்த வெளி, தொலைதூரம் மற்றும் ஆன்லைன் வழி கல்வியில் அனுமதிக்க ஒழுங்குமுறை கவுன்சில் அமைப்புக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. இதே போல முனைவர் மற்றும் ஆராய்ச்சி படிப்பையும் இந்த முறையில் பெற தடை செய்துள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.