தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை 75 சதவீதம் இணையவழியில் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு பனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்காக ஆசிரியர்கள் வெளியிடங்களுக்கு சென்று பயிற்சி பெறுவதால் கடும் சிரமம் ஏற்பட்டது. ஆசிரியர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 75 சதவீதம் பயிற்சிகள் இணையவழியில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.