தமிழகத்தில் அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல கேள்விகள் எழுந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் காலத்தில் இலவச மிதிவண்டி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து வகுப்புகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்