தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இன்று  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வருவதால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, நேற்றும் இன்றும்  தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாகவும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.