தமிழகத்தில் மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்கான புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல் மற்றும் நுகர்வோர் அழிக்கும் புகார்கள் உள்ளிட்ட ஏழு சேவைகள் தொடர்பான தரவுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வதோடு சரிபார்க்கவும் முடியும். அது மட்டுமல்லாமல் இந்த செயலி மூலமாக களப்பணியாளர்களுக்கு பணிகளை உதவி பொறியாளர்கள் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.