கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் (நிலைய அதிகாரி) சிறிதும் தாமதிக்காமல் ஓடி வந்து அவரைப் பிடித்து இழுத்தார். ஒரு நொடி தாமதித்திருந்தால் கூட அந்தப் பயணியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அந்த அதிகாரியின் இந்தத் துரிதமான செயல் ஒரு பெரிய விபத்தைத் தடுத்து, ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளது.
Karnataka: Station Master saves the life of a passenger who attempted to board a moving train🫡
pic.twitter.com/Maa0FpP9lF— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 22, 2025
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தனது உயிரைப் பணையம் வைத்துப் பயணியைக் காப்பாற்றிய அந்த அதிகாரியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், அவசரம் கருதி ஓடும் ரயிலில் ஏறுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் ரயில்வே நிர்வாகம் பயணிகளை எச்சரித்துள்ளது.
