தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சீன் ஆ சீன் ஆ பாடல் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்த பாடல் காட்சியில் அதிக அளவில் நடன கலைஞர்கள் இடம்பெற்று இருந்தனர். பெரும்பாலும் பாடல் காட்சிகளில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சென்னையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை வைத்து படமாக்கியுள்ளார். இதற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் இயக்குனர் மடோன் அஸ்வின், தயாரிப்பாளர் அருண் விஷ்வா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் மாவீரன் படத்தின் சூட்டிங் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் மிஷ்கின் இடம்பெறும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.