சீமான் மீதான பாலியல் புகாரை நடிகர் விஜயலட்சுமி வாபஸ் வாங்கிய நிலையில் மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .அதில் இந்த போர் இதோடு முடியவில்லை சீமான். மீண்டும் புதிய ஆதாரத்தோடு வருவேன் என்று கூறியதால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளார்கள். சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு ஏமாற்றிவிட்டதாக நடிகர் விஜயலட்சுமி 10 வருடத்திற்கு மேலாக வீடியோ வெளியிட்டு வந்தார். இது குறித்து சீமானும் பேசாமல் வந்த நிலையில் தான் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை புகார் கொடுத்தார்.

இந்த விவகாரம் தமிழக முழுவதும் தெரியும். இந்த நிலையில் சீமான் கைது செய்யப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் சீமான் கொடுத்த புகாரை யாரும் எதிர்பார்க்க விதமாக விஜயலட்சுமி வாபஸ் வாங்கினார். இனி திரும்ப வரமாட்டேன் சீமான் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு பெங்களூர் சென்றார்.. இது ஒருபுறம் இருக்க புகாரை வாபஸ் வாங்கினாலும் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் அவருக்கு காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.

இதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நாதாக கட்சியினர் நிம்மதி பெருமூச்சு விட்ட சூழலில் இப்போது மீண்டும் புதிய வீடியோவை ரிலீஸ் செய்து அலரவிட்டுள்ளார் விஜயலட்சுமி. அதில்ஏதோ என் மேல் மான நஷ்ட வழக்கு போட போறீங்களாமே. பத்து வருஷத்துக்கு முன்பு நடந்த பாலியல் புகார் வேண்டுமானால் என்னால் நிரூபிக்க முடியாமல் போகலாம். ஆனால் மற்ற விஷயங்களை நிரூபிப்பேன். whatsapp பில் பேசிய ரெக்கார்டிங் எடுத்துட்டு வரேன். சீமான் ஒன்னே ஒன்னு சொல்லுறேன் நான் பொய் சொல்ற பொண்ணு மாதிரி நீங்க வெளியே பேசினீங்கன்னா. இந்த போர் முடியாது அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.