நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.