பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்குவதாக மக்களவை  அறிவிப்பு வெளியிட்டது.  ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையின் அவதூறு வழக்கில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவாக பேசியுள்ளார். எம்பி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு பங்களாவையும் ஒப்படைக்குமாறு ராகுலுக்கு அறிவுறுத்த, அதனை அவரும் ஏற்றார். அந்த அறிக்கையை ட்விட்டரில் பதிவு செய்த பிரகாஷ் ராஜ், நாட்டை பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரின் வீடும் உங்கள் வீடு தான். இந்த நாடே உங்கள் வீடு தான் ராகுல் என பதிவிட்டுள்ளார்.