பெண்களுக்கான பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் ரயில் பெட்டிகளிலேயே, பெண்களே பெண்களைச் சீண்டும் அவலம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த லேடிஸ் கம்பார்ட்மென்ட்டில் பயணம் செய்த இரு இளம் பெண்களை, தரையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் வேண்டுமென்றே பெண்களின் மார்பு, இடுப்பு மற்றும் ஆடைக்குக் கீழே என அநாகரீகமான கோணங்களில் எடுக்கப்பட்டுள்ளன.
இதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உடனடியாகத் தட்டிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த அநாகரீகப் பெண்கள், ஒரு புகைப்படத்தை மட்டும் அழித்துவிட்டு, மீதமுள்ள ஒன்றை வைத்துக்கொள்வதாகத் திமிராகப் பதிலளித்துள்ளனர். அந்தப் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் எவரும் தலையிடாதது வேதனை அளிக்கிறது.
Ladies compartment isn't even safe anymore from ladies itself😭🙏
Two young women boarded a crowded ladies’ compartment thinking it would be safe, only to be secretly photographed by two women sitting on the floor.
The shots focused on their chest, waist, and under the skirt.… pic.twitter.com/Sjc0Z3xTxE
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 10, 2026
அடுத்த நிலையிலேயே ரயிலை விட்டு இறங்கிவிட்ட அந்தப் பெண்கள், தற்போது மிகுந்த அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் உள்ளனர். பொது இடங்களிலும், ஏன் பெண்களுக்கான பாதுகாப்புத் தனிப் பெட்டிகளிலும் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத அவல நிலையை இந்தச் சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
