பரந்த தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் மேற்கு இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் கடுமையான பொருட்சேதமோ? அல்லது உயிரிழப்புகளோ? ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ஆழத்தில் ஆச்சே  மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்மேற்கு தென்கிழக்கே 48 கிலோமீட்டர் மையமாக இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் இந்தோனேசியாவின் காலநிலை, வானிலை மற்றும் புவி இயற்பியல் மைதானத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி அன்று 5.6 என்ற ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின்  சியாஞ்சுர் நகரில் 331 பேர் உயிரிழந்தனர். மேலும் 600 பேர் காயமடைந்தனர். 2018 -ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்துள்ளனர்.