ஜூன் 2023 நிலவரப்படி ரயில்வேயில் சுமார் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன, அவற்றில் 1.7 லட்சத்திற்கும் அதிகமானவை பாதுகாப்பு பிரிவில் உள்ளன என்று ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த கேள்விக்கு, குரூப் சி பிரிவில் லெவல் 1 உட்பட 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் பாதுகாப்புப் பிரிவில் மொத்தம் 1,77,924 காலியிடங்கள் உள்ளன. குரூப்-சி காலியாக உள்ள மொத்த அரசிதழ் அல்லாத பணியிடங்களின் எண்ணிக்கை 2,74,580 என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.