இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்று விட்டு, டெல்லிக்கு விமானத்தில் ஏறியபோது அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயங்க், ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.