மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பெறாத புஜாரா ட்விட்டரில் உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டார்..

டெஸ்டில் நட்சத்திர பேட்டர் என்று அழைக்கப்படும் சேட்டேஷ்வர் புஜாராவுக்கு இந்திய தேர்வாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில்  அவர் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக புஜாராவால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியவில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தோல்வியடைந்தார். 2 இன்னிங்சிலும் முறையே 14 மற்றும் 27 ரன்கள் எடுத்தார்.

புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரஹானேவை தவிர அனைவரும் சொதப்பிய நிலையில் புஜாரா மட்டும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று தேர்வு குழுவை விளாசினார்..

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படாததால், சேதேஷ்வர் புஜாரா உணர்ச்சிவசப்பட்டார். கிரிக்கெட் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் அவர், மைதானத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ஹாட் எமோஜிகளை வெளியிட்டார்..