உலகக்கோப்பை பைனலில் இந்தியா வென்றால் ஐந்து நாட்கள் இலவச சவாரி வழங்குவதாக சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அனில்குமார் என்பவர் அறிவித்துள்ளார். அதனை போலவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்றால் 10 நாட்கள் வரை இலவச சவாரி வழங்குவதாக அனில் குமார் அறிவித்திருந்தார். ஆனால் அந்த தொடரில் இந்தியா வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பலித்தீர்த்ததால் ஒரு மாதம் இலவச சவாரி வழங்குவதாக கூறி அதை செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து தற்போது உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வென்றால் ஐந்து நாட்கள் இலவச சவாரி வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.