வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 114 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

2026 டி20 உலகக்கோப்பையின் போது, “நான் இந்திய அணியின் போட்டிகளைப் பார்ப்பதே இல்லை” என இந்திய கிரிக்கெட்டை அவமதிக்கும் வகையில் ரிஸ்வான் பேசிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வரும் நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் 20 பந்துகளில் வெறும் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததை ரசிகர்கள் ‘டக்-டக் ரிஸ்வான்’ எனக் கிண்டல் செய்து வருகின்றனர்.

“>

 

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணாவின் அனல் பறக்கும் பந்துவீச்சில் சிக்கி பாகிஸ்தான் நிலைகுலைந்த நிலையில், வரும் மார்ச் 13-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ளது.

“>