ஓமன் கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த ‘எம்.டி.மாரிவேக்ஸ்’ (MT Marivex) என்ற இந்தியக் கொடி ஏந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் திடீரென பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலை அமெரிக்க கடற்படையே நடத்தியதாக முதற்கட்டமாகத் தகவல்கள் வெளியாகி சர்வதேச அளவில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கச்சா எண்ணெய் கப்பலை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த விபரீதச் சம்பவம் காரணமாக, கப்பலில் இருந்த ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் சினிமா, அரசியல் வட்டாரங்கள் மத்தியில் மாபெரும் திக் திக் நிமிடங்கள் அரங்கேறின.
Just in: Attack on a vessel off the coast of Oman says Forward Seaman's Union of India says; Indians on the vessel pic.twitter.com/Kwzem12ybb
— Sidhant Sibal (@sidhant) June 8, 2026
இந்த விவகாரம் குறித்து உடனடியாக களமிறங்கிய மத்திய அரசு, எம்.டி.மாரிவேக்ஸ் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் முற்றிலும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவலை அவசரமாக வெளியிட்டுள்ளது. மேலும், நடுக்கடலில் தவித்து வரும் அந்த 24 இந்திய மாலுமிகளையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மீட்டு தாயகம் கொண்டு வருவதற்கான அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
