தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ‌.9000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தமிட்டது. அந்த வகையில் தற்போது புதிய கார் தொழிற்சாலை ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் மூலம் வருடத்திற்கு 2 லட்சம் கார்கள் தயாரிக்கப்படும். இங்கு விலை உயர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.  இந்த கார் முதல் முறையாக முற்றிலுமாக இந்தியாவில்  தயாரிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.