சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அங்கு கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். சில மணி நேரங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலை மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக கூறப்படுகிறது. இதேபோன்று உத்திரகாண்ட் எல்லையிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.