
இந்தியாவில் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 33 புதிய புவிசார் குறியீட்டு பதிவுகளை நிறைவு செய்ததன் மூலம் 2022-23ஆம் ஆண்டில் இந்தியா இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச புவிசார் குறியீட்டு பதிவுகளை எட்டி உள்ளது. அவற்றுள் வாரணாசியை சேர்ந்த இரண்டு உட்பட பத்து குறியீடுகள் உத்திரபிரதேச மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பத்து பொருட்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் உத்திர பிரதேச மாநிலம் தற்போது 45 புவிசார் குறியீடுகளைக் கொண்டுள்ளது. இதில் 20 பொருட்கள் வாரணாசி பகுதியை சேர்ந்தவை ஆகும். புவிசார் குறியீட்டு பதிவகம் சென்னையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
